இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
புலவர் கபில தேவர்

இன்னா நாற்பது 

பாடல் - 03

"கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா

நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா

கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா

தடுமாறி வாழ்த லுயிர்க்கு". 

                               - புலவர் கபில தேவர்.

விளக்கம்:

               கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்