இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
பெருவாயின் முள்ளியார்

 ஆசாரக்கோவை 

பாடல் - 002

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

இன்னிசை வெண்பா

"பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு

நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை

இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்

ஒழக்கம் பிழையா தவர்". 

                     -புலவர் பெருவாயின் முள்ளியார்.

விளக்கம்:

                   நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார்.