இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
கபில தேவர்

 இன்னா நாற்பது 

பாடல் - 15

"புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா

கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா

இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா

பல்லாரு ணாணப் படல்"

                                        - புலவர் கபில தேவர்.

விளக்கம்:

                  புல்லை உண்கின்ற குதிரையின்மேல் மணியில்லாமல் ஏறிச் செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம் துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கமடையும்படியான நிலையில் இருத்தல் துன்பமாம்.