இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
கபில தேவர்

இன்னா நாற்பது 

பாடல் - 10

"பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா

இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா

அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா

பொருளில்லார் வண்மை புரிவு". . 

                                        புலவர் கபில தேவர்.

விளக்கம்:

                 பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.