இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
பெருவாயின் முள்ளியார்

நீராட வேண்டிய சமயங்கள்

பஃறொடை வெண்பா

"தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை

உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது

வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்

ஐயுறாது ஆடுக நீர்"

தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,

உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,

வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்

மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்

ஐயுறாது, ஆடுக, நீர்! . 

      

                                      -பெருவாயின் முள்ளியார்.

விளக்கம்:

                      தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மை யுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும், மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், இணைவிழைச்சு உண்டாயின விடத்தும், கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள் கான்றவிடத்தும் என இப்பத்திடத்தும் ஐயுறாதே நீராடுக.

கருத்துரை:

கடவுள் வழிபாடு முதலியபத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.