இன்றைய திருக்குறள்
திருக்குறள்
செய்ந்நன்றி அறிதல் அதிகாரம்

குறள் எண் :109
"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.



