இன்றைய இலக்கணம்

இன்றைய இலக்கணம்
சமண முனிவர்கள்

நாலடியார்

 அறத்துப்பால்- துறவரவியல் 

பொறையுடைமை

பாடல் : 072

"நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது

தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்

புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்

சமழ்மையாக் கொண்டு விடும்".

                                - சமண முனிவர்கள்.

பொருளுரை:

              நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்.