இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

 நான்மணிக்கடிகை

பாடல் எண் 9 

"நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்

குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்

தான்செல் உலகத் தறம்".

                                       - விளம்பி நாகனார்.

விளக்கம்:

            நெல்லும், கரும்பும், வயலுக்கு அழகு சேர்க்கும். தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும். நாணம் பெண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும்.