இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

 நான்மணிக்கடிகை 

பாடல் - 010

"கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர

மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி

இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை

நயத்திற் பிணித்து விடல்". 

                                            -விளம்பி நாகனார்.

விளக்கம்:

           யானையைக் கட்டுத் தறியினாலும், பாம்பை மந்திரத்தாலும், கீழ்மக்களைக் கொடிய இரும்பு விலங்காலும் வயப்படுத்துவர். சான்றோரை இன் சொற்களால் தன்வயப்படுத்துவர்.