இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
புலவர் கபிலதேவர்

   

இன்னா நாற்பது 

பாடல் - 23

"சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா

துறையிருந் தாடை கழுவுத லின்னா

அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா

நிறையில்லான் கொண்ட தவம்". 

                                         -புலவர் கபில தேவர்.

 விளக்கம்:

                     மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றோரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.