சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தினத்தை ஒட்டி, 3-வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னை ராஜாஜி சாலையில் நேற்று நடைபெற்றது

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்​டையை சுற்றி நாளை காலை 6 முதல் 10 மணி வரை போக்குவரத்தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன் விவரம்: காம​ராஜர் சாலை​யில் உழைப்​பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்​பிஐ சுரங்​கப்​பாதை வரையி​லான சாலைகள் மற்​றும் கொடி மரச்​சாலை​யில் வாக​னங்​கள் செல்​லத் தடை விதிக்​கப்​படும்.

காம​ராஜர் சாலை​யில் ராஜாஜி சாலை வழி​யாக பாரி​முனை நோக்​கிச் செல்ல விரும்​பும் வாக​னங்​கள் வாலாஜா சாலை​யில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலை​யில் இணைந்​து, மன்றோ சிலை, முத்​து​சாமி பாலம், முத்​து​சாமி சாலை, ராஜா அண்​ணா​மலை மன்​றம் மற்​றும் என்​.எஃப்​.எஸ். சாலை வழி​யாக பாரி​முனையை அடைய​லாம்.

ராஜாஜி சாலை​யி​லிருந்து தலை​மைச் செயல​கம் வழி​யாக காம​ராஜர் சாலை நோக்கி வரும் வாக​னங்​கள், பாரி​முனை, என்​.எஃப்​.எஸ். சாலை, ராஜா அண்​ணா​மலை மன்​றம், முத்​து ​சாமி சாலை, முத்​து​சாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழி​யாக அண்ணா சிலை​யில் இடது புறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கிசென்று காம​ராஜர் சாலையை அடைய​லாம்.

இவ்​வாறு போக்​கு​வரத்து போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சுதந்​திர தினத்தை முன்​னிட்டு இறு​திக் கட்ட ஒத்​திகை தலை​மைச் செயல​கம் எதிரே நேற்று காலை நடை​பெற்​றது. இதில் காவல் துறை உட்பட பல்​வேறு துறை மற்​றும் படைகளைச் சேர்ந்த வீரர்​கள் சீருடை​யுடன் அணிவகுப்​பில் கலந்து கொண்​டனர். முதல்​வர் தேசி​யக் கொடியை ஏற்​று​வது​ போல​வும், அணிவகுப்​பு மரி​யாதையை ஏற்​றுக்​கொள்​வது போல​வும்​ ஒத்​தி​கை நடத்​தப்​பட்​டது.