இன்றைய திருக்குறள்
திருக்குறள்
அன்புடைமை அதிகாரம்

குறள் எண் :71
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்..



