தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
Youth arrested for sexually harassing sister

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கொத்தங்குளம் பகுதியிலுள்ள தனது உறவு பெண்ணான, தங்கை முறையை சேர்ந்த சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் நவீன்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.