சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய்.. உயிரைக் காத்த ரெயில்வே போலீஸ்
தேவ் ஆதிரன் என்ற 2 வயது சிறுவன் தவறுதலாக விழுங்கியதில் மிட்டாய் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
உயிரை காத்த ரெயில்வே காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை மேட்டுப்பாளையம் – போத்தனூர் இடையேயான இயங்கி வரும் ரெயிலை நாள்தோறும் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ரெயிலில் பயணித்த தேவ் ஆதிரன் என்ற 2 வயது சிறுவன் தவறுதலாக விழுங்கியதில் மிட்டாய் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது.
இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் வரும் சூழல் ஏற்பட்டது. அப்போது ரெயிலில் பணியில் இருந்த ஆர்.பி.எப் போலீசார் துரிதமாகச் செய்யப்பட்டு மிட்டாயை அகற்றி சிறுவனை காப்பாற்றினர்.
ரெயில் கோவையை அடைந்ததும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுவனின் தொண்டையில் இருந்து காவலர்கள் மிட்டாயை அகற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் உயிரை காத்த ரெயில்வே காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Yasmin fathima

