மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவினர் அதிருப்தி

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவினர் அதிருப்தி
மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவினர் அதிருப்தி

சென்னை: மாநில கல்விக் கொள்கை குறித்து அதன் வடிவ​மைப்பு குழு​வில் இடம்​பெற்ற சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியது: அரசிடம் நாங்​கள் சமர்ப்​பித்து ஓராண்டு தாமதத்​துக்கு பிறகு, தற்​போது மாநில கல்விக் கொள்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. நாங்​கள் அளித்த அறிக்​கை​யில் இருந்து முற்​றி​லும் மாறு​பட்​ட​தாக உள்​ளது.

நாங்​கள் பரிந்​துரை செய்​யாத பல அம்​சங்​கள் இதில் உள்​ளன. பெரிய அளவில் தொலைநோக்கு திட்​டங்​கள் எது​வும் இல்​லாமல், தமிழக அரசின் தற்​போதைய திட்​டங்​கள், செயல்​பாடு​கள் என கிட்​டத்தட்ட மானியக் கோரிக்​கை​போல உள்​ளது.

உயர்​கல்​வியை விட்​டு​விட்​டு, பள்​ளிக்​கல்விக்கு மட்​டும் தனி​யாக கல்விக் கொள்கை வெளி​யிட்​டதற்​கான காரண​மும் தெரிய​வில்​லை. கல்விக் கொள்கை வடிவ​மைப்​புக்​காக தீவிர​மாக உழைத்​தும்​, எங்​களுக்கு​ அங்​கீகாரம்​ வழங்​கப்​பட​வில்​லை. வெளி​யீட்​டு விழாவுக்​கு அழைக்​கவும் இல்​லை. இவ்வாறு கூறியுள்ளனர்​.