வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

Young man commits suicide by jumping in front of train after leaving WhatsApp status!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

நெல்லையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில், நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் நெல்லை நகரம் பழனி தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாயாண்டி (21) என்பது தெரிய வந்தது. இவர் நெல்லையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, மாயாண்டி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. ஆனால் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து நெல்லை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.