முதியோர் தின விழா கேக் வெட்டி கொண்டாட்டம்

முதியோர் தின விழா

முதியோர் தின விழா கேக் வெட்டி கொண்டாட்டம்

சிற்பி மக்கள் நல அறக்கட்டளை மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் இணைந்து பிலாங்ககாலவிளை சமீபத்தில் உள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா கேக் வெட்டி கொண்டாடினர்.

சிற்பி அறக்கட்டளையின் தலைவர் ஜெயா ஸ்ரீதரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். மூத்த அறிவிப்பாளர் விஜி பூரண சிங் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் கிளையின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களும் முதியோர்களை வாழ்த்தி பேசினர்.

கலையூர் காதர் அவர்கள் முதியோர் தின சிறப்பு விழிப்புணர்வு பாடல் பாடினார்.

 முதற்சங்கு பத்திரிக்கை ஆசிரியர் சிவனி சதீஷ் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா நற்பணி மன்ற தலைவர் குமரேசன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் முதியோர்களுக்கு பாட்டு போட்டி பேச்சு போட்டி என பல விதமான போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதியோர்களை மகிழ்விக்கும் விதமாக சிலம்பம் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முதியோர் இல்லத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் அருள் சகோதரிகளுக்கு நினைவு பரிசு கொடுத்து சிறப்பிக்கப்பட்டது.