அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
கனடாவில் பூமிக்கு அடியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அமைதியாக அழுத்தத்தைக் குவித்து வருகிறது என்றும் அது திடீரென மோசமான ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

7.5 ரிக்டர் நிலநடுக்கம்

சமீபத்தில், யூகோன் பகுதியில் 'Tintina Fault' என்ற ஒரு கோட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், இது 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு வழிவகுக்கும் என்றே கூறுகின்றனர்..

Tintina Fault என்பது யூகோனில் இருந்து தொடங்கி அலாஸ்கா வரை செல்லும் ஒரு நீண்ட கோடு. இதன் நீளம் சுமார் 1,000 கிலோமீற்றர்களாகும். இது பிரிட்டிஷ் கொலம்பியா வழியாகச் சென்று தெற்கு கனடாவில் ஒரு பள்ளத்தாக்கை உருவாக்கும் மற்றொரு பெரிய கோட்டில் இணைகிறது.

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கோடு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தியது, ஆனால் கடந்த 12,000 ஆண்டுகளாக இது அமைதியாக உள்ளது. இந்தப் பிளவு படிப்படியாக அழுத்தத்தைக் குவித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்...

கடந்த 26 லட்சம் ஆண்டுகளில், அதன் இரு பக்கங்களும் 1,000 மீற்றர் சரிந்துள்ளன, கடந்த 1.36 லட்சம் ஆண்டுகளில், 75 மீற்றர் சரிந்துள்ளன. இது ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக நகர்ந்து வருகிறது.

அழுத்தம் குவிந்துள்ளது

தற்போது, 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் அளவுக்கு அதிக அழுத்தம் அடைந்துள்ளது. இந்த நிலநடுக்கம் எந்த நேரத்திலும் ஏற்படலாம், ஒருவேளை நம் வாழ்நாளிலேயே கூட. இது ஒரு பழைய பலவீனமான இடம், இது பூமியின் அழுத்தத்தைக் குவித்து திடீரென வெடிக்கக்கூடும் என்றே விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கிறார்..

இந்த ஆய்வுகளுக்கு விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் மற்றும் LiDAR ஐப் பயன்படுத்தினர். அதில், தற்போது 6 மீற்றர் அளவிற்கு அழுத்தம் குவிந்துள்ளது என்றும், இது ஒரு நிலநடுக்கத்திற்கு போதுமானது என்றும் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும் நிலநடுக்கம் எப்போது நிகழும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம், அல்லது திடீரென்று கூட நிகழலாம்..

நிலநடுக்கம் ஏற்பட்டால், அது சிறிய கிராமங்களை மொத்தமாக சேதப்படுத்தும். சுரங்கங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.