ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை சமாளிக்க ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20,000 கோடியில் திட்டம்

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை சமாளிக்க ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20,000 கோடியில் திட்டம்
ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை சமாளிக்க ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.20,000 கோடியில் திட்டம்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகை​யில், ஏற்​றுமதியை ஊக்​கு​விக்க ரூ.20 ஆயிரம் கோடியில் சிறப்பு திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு தயா​ராகி வரு​கிறது. இந்​திய பொருட்​களின் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரி விதிப்பை அமல்​படுத்​தி​யுள்​ளார்.

மேலும், ரஷ்​யா​வில் இருந்து இந்​தியா தொடர்ந்து கச்சா எண்​ணெய், ராணுவ தளவாடங்​களை கொள்​முதல் செய்​வ​தால் கூடு​தல் அபராத​மும் செலுத்த நேரிடும் என்று இந்​தி​யாவை எச்​சரித்​துள்​ளார். இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஏற்​றும​தி​யாளர்​களை பாது​காக்க இந்​தியா ரூ.20 ஆயிரம் கோடி மதிப்​பிலான ஒரு மிகப்​பெரிய ஏற்​றுமதி திட்​டத்தை தயாரித்து வரு​கிறது.

தற்​போதைய வர்த்தக நிச்​சயமற்ற தன்​மை​களுக்கு மத்​தி​யில் இருந்து ஏற்​றும​தி​யாளர்​களைப் பாது​காக்க புதிய விரி​வான உத்திகளு​டன் கூடிய இந்த ஏற்​றுமதி திட்​டத்தை மத்​திய அரசு அடுத்த சில வாரங்​களில் செயல்​படுத்​தும் என்று எதிர்​பார்க்கப்படுகிறது.

பிராண்டு இந்​தி​யா’ பெயரில் பொருட்​களை சந்​தைப்​படுத்​து​மாறு வர்த்தக மற்​றும் தொழில் துறை அமைச்​சகம் ஏற்றுமதியாளர்களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்​பிலான இந்த திட்​டம் ஏற்​றும​தி​யாளர்​களை சர்​வ​தேச வர்த்தக ஏற்ற இறக்​கங்​கள் மற்​றும் சந்தை நிச்​சயமற்ற தன்​மை​களி​லிருந்து பாது​காக்​கும் என்று அரசு நம்​பு​கிறது.

.

இதனை வரும் செப்​டம்​பர் மாதத்​துக்​குள் அறி​முகப்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. இந்த புதிய ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு திட்​டம், கடன் அணுகலை எளி​தாக்​கு​வதை​யும், சர்​வ​தேச சந்​தைகளில் வரி அல்​லாத தடைகளை நிவர்த்தி செய்​வதை​யும் மைய​மாகக் கொண்​டிருக்​கும் என்று அதி​காரி​கள் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர்.

வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சகம், குறு, சிறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள் மற்​றும் நிதி அமைச்​சகங்​களுக்கு இடையே​யான கூட்டு முயற்​சி​யில் இந்த திட்​டம் உரு​வாக்​கப்​படு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. “இந்த சவாலான கால​கட்​டத்​தில் இத்​தனை ஆயிரம் கோடி மதிப்​பிலான நமது ஏற்​றும​தியை ஆதரிக்க முடிந்​தால் அது இந்​தி​யா​வுக்கு மிக சாதக​மாக இருக்​கும்” என்று இந்​திய ஏற்​றுமதி அமைப்​பு​களின் கூட்​டமைப்பு (எப்​ஐஇஓ) இயக்​குநர்​ ஜெனரல்​ அஜய்​ சஹாய்​ கூறி​யுள்​ளார்​.