இருமொழிக் கொள்கை தான் நமது உறுதியான கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்ட பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய ஆற்றல் வந்துவிடும்.
* மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகிறேன்.
* இளைய பருவத்தில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாகப்படித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வரலாம்.
* கொரோனா காலத்தில் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இல்லம் தேடி கல்வி திட்டம் வழங்கினோம்.
* பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இது சிறப்பு வாய்ந்த விழா.
* எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதில்லை.
* திராவிட மாடல் அரசில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பாராட்டு விழா.
* திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வை காட்டுவதே இந்த பாராட்டு விழா.
* 100 சதவீதம் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதே நமது இலக்கு. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வி பெற்றனர் என்ற இலங்கை எட்டுவதற்கு சாதித்த மாணவர்கள் உதவ வேண்டும்.
* முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும்.
* மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவுக்கு நன்றி.
* தொலைநோக்கு பார்வையோடு மாநில கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளோம்.
* காடு எதுவாக இருந்தாலும் சிங்கம்தான் அங்கே ராஜா, அதுபோல் எளிய பின்னணியில் இருந்த வந்த நீங்கள் தான் ஹீரோ.
* மனப்பாடம் பண்ணும் மாணவர்கள் அல்லாமல் சிந்திக்கும் மாணவர்களை உருவாக்க உள்ளோம்.
* அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என நெஞ்சை நிமிர்த்தி பேச செய்த மாணவர்களுக்கு நன்றி.
* தமிழக பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும். தமிழும், ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கை தான் நமது உறுதியான கொள்கை.
* கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளோம்.
* மதிப்பெண்களை நோக்கி அல்ல, மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக அமைக்கப்படும்.
* பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.


Yasmin fathima

