பங்குனி உத்திரத்திற்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை 

பங்குனி உத்திரத்திற்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை 
பங்குனி உத்திரத்திற்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

 

பங்குனி உத்திர திருவிழாவிற்கு அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அனைத்திந்திய இந்து திருக்கோயில் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேளன் ஜி செய்தியாளர்களை சந்தித்தபோது இந்துக்கள் வணங்கும் தெய்வங்களின் மிகவும் முக்கிய கடவுளும் , தமிழ் கடவுளுமாகிய முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகெங்கும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமர்சையாக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகையால் பாரம்பரியமிக்க திருவிழாவான பங்குனி உத்திர திருவிழா தினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசை அனைத்திந்திய இந்து திருக்கோயில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் , இந்து சமய மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தமிழக அரசு இந்த பங்குனி உத்திரத் திருவிழாவானது மிக விமர்சையாகவும் , திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனை முன்னிட்டு அனைத்துவித அடிப்படை வசதிகளையும் செய்து இந்த பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடந்திட இந்து சமய அறநிலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.