டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?

டிசிஎஸ் பணிநீக்கத்தால் வீடு, மனை விற்பனை பாதிக்குமா? வல்லுநர்கள் சொல்வது என்ன?
டிசிஎஸ் பணிநீக்கத்தினால் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி...

டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடி துறையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உலகம் முழுவதும் உள்ள தங்களுடைய நிறுவனங்களில் இருந்து 2%, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை நோக்கி படையெடுத்த ஐடி துறை, தற்போது ஏஐ எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தால் மீண்டும் பின்னோக்கி தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.

டிசிஎஸ் பணிநீக்கம் என்பது ஆரம்பம்தான், தொடர்ந்து அடுத்த சில வருடங்களில் மற்ற நிறுவனங்களும் இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று பலரும் பேசி வருகின்றனர்.

பணிக்கு அமர்த்த நிறுவனங்கள் தயங்குகின்றனர். தொடர்ந்து பணிநீக்கங்கள் நடைபெறும்பட்சத்தில் விளைவுகள் இருக்கும்' என்று தெரிவித்தார்.

அனராக் நிறுவனத் தகவலின்படி, 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025 இரண்டாம் காலாண்டில் வீட்டுமனை மற்றும் வீடுகள் விற்பனை 20% சரிந்துள்ளது. 2024 இரண்டாம் காலாண்டில் 120,335 யூனிட்கள் விற்பனையான நிலையில் 2025ல் 96,285 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. செய்யறிவு தொழில்நுட்பத்தால் மேலும் பல துறைகள் சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேலை உத்தரவாதமின்மை மற்றும் திடீர் பணிநீக்கங்கள் தனிப்பட்டவர்களின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஐடி ஊழியர்கள் பெரும்பாலும் தங்களது ஊதியத்தின் அடிப்படையில் வீடுகளை, மனைகளை வாங்கி அதற்கு பெருந்தொகையை இஎம்ஐ-யாக செலுத்தி வரும் நிலையில் பணிநீக்கம் தொடர்ந்தால் அவர்கள் இந்த பெரும் தொகை இஎம்ஐ-யை செலுத்த முடியாமல்கூட போகலாம் என்றும் பேசப்படுகிறது.

ஐடி தொழில்துறையின் சங்க அமைப்பான நாஸ்காம், செய்யறிவு தொழில்நுட்பத்தினால் வரும் மாதங்களில் பல நிறுவனங்களில் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வரலாம் என்று கூறுகிறது.

ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் பேரை நடப்பாண்டு பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.