சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல் அதிகாரிகளுக்கு  குடியரசுத் தலைவர் பதக்கம்
பால​நாகதே​வி, கார்த்திகேயன், லட்சுமி, சக்திவேல், விமலா, கிறிஸ்டின் ஜெயசில்

சென்னை: சுதந்​திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதி​காரி​களுக்கு குடியரசுத் தலை​வர் பதக்​கம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக டிஜிபி அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அளவில் தனிச் சிறப்​புடன் பணி​யாற்​றும் காவல் அதி​காரி​களுக்கு ஆண்​டுக்கு இரு​முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் இந்த ஆண்​டு, சுதந்​திர தினத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வரின் தகை​சால் பணிக்​கான பதக்​கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதி​காரி​களுக்கு வழங்​கப்​படு​கிறது.

அதன்​படி, பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி பால​நாக தே​வி, சென்னை பெருநகர போக்​கு​வரத்​துக் காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன், சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு ஐஜி சு.லட்​சுமி ஆகியோ​ருக்கு இந்த பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. மேலும், குடியரசுத் தலை​வரின் மெச்​சத்​தக்க பணிக்​கான பதக்​கங்​கள் 21 பேருக்கு வழங்​கப்​படு​கின்​றன.

அதன் விவரம் வரு​மாறு: சென்னை மாநில மனித உரிமை​கள் ஆணைய (புல​னாய்​வுப் பிரிவு) காவல் கண்​காணிப்​பாளர் ஆ.ஜெயலட்​சுமி, சென்னை பெருநகர காவல் நுண்​ணறி​வுப் பிரிவு (1) துணை ஆணை​யர் சக்​திவேல், நாமக்​கல் மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் சு.​விமலா, சென்னை பாது​காப்​புப் பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை காவல் துணை கண்​காணிப்​பாளர் துரை​பாண்​டியன், திருச்சி மாவட்ட தலை​மை​யிட கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் கோபாலச்​சந்​திரன், சென்னை சிறப்​புப் பிரிவு தனிப்​பிரிவு குற்​றப்​ புல​னாய்​வுத் துறை கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் சுதாகர் தேவச​கா​யம் ஆகியோ​ருக்​கும்.

சென்னை பாது​காப்​புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்​வாளர் ஸ்ரீவித்​யா, நாகை மாவட்​டம் நாகூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்​வாளர் அனந்​தன், பெரம்​பலூர் மாவட்​டம் சிறப்​புப் பிரிவு காவல் உதவி ஆய்​வாளர் கண்​ணு​சாமி, திருச்சி ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​பு துறை சிறப்பு காவல் உதவி ஆய்​வாளர் பார்த்​திபன், சென்னை சிறப்பு புல​னாய்​வுப் பிரிவு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சென்னை ஊழல் தடுப்பு, கண்​காணிப்பு துறை சிறப்பு புல​னாய்​ வுப்பிரிவு காவல் உதவி ஆய்​வாளர் கணேசன், சேலம் மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு காவல் ஆய்​வாளர் நந்​தகு​மார் ஆகிய 21 பேருக்கு பதக்​கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.