ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்

ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்
ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடக்கும் சொத்து பதிவு குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம்

சென்னை: சொத்​துப்​ப​தி​வின் போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகை ரொக்​க​மாக பரி​மாறப்​பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்​தால் அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று சார் பதி​வாளர்​களுக்​கு, உச்ச நீதி​மன்ற தீர்ப்பை சுட்​டிக்​காட்டி பதிவுத்துறை மீண்​டும் அறி​வுறுத்​தியுள்​ளது.

கடந்த 2015-ம் ஆண்டு நிதிதொடர்​பான மசோதா நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில், சொத்து பரி​மாற்​றத்​தின்​போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான ரொக்​கப் பரிவர்த்​தனை நடை​பெற்​றிருந்​தால், அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று அறிவறுத்​தப்​பட்​டது.

இதுகுறித்​து, அப்​போதே, அனைத்து சார் பதி​வாளர் அலு​வல​கத்​துக்​கும் பதிவுத்​துறை தலை​வர் அறி​வுறுத்​தி​யிருந்​தார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதி​மன்ற வழக்கு ஒன்​றில் வழங்​கிய தீர்ப்​பில், ரொக்​கப் பரி​மாற்​றம் குறித்த தகவல் பெரும்பாலும் வரு​மான வரித்​துறைக்கு தெரிவிக்​கப்​ப​டா​மல் இருப்​பது கவனத்​துக்கு வந்​துள்​ளது.

எனவே, சொத்து விற்​பனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவுக்​கும் மேல் ரொக்​கப் பரி​மாற்​றம் நடை​பெற்​றிருந்​தால், சம்​பந்​தப்​பட்ட பகுதி வரு​மானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும். வரு​மான வரித்​துறை​யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். ஒரு​வேளை தகவல் தெரிவிக்​கா​விட்​டால், மாநில தலை​மைச்​செயலர் கவனத்​துக்கு கொண்டு சென்று பதிவு அதி​காரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தெரி​வித்​துள்​ளது.

.

இதையடுத்​து, தற்​போது பதிவுத்​துறை தலை​வர், அனைத்து பதிவு அலு​வலர்​கள், மாவட்ட பதி​வாளர்​கள், துணை பதிவுத் துறை தலை​வர்​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி, ரூ.20 ஆயிரத்​துக்​கும் அதிகமாக ரொக்​கப் பரி​மாற்​றம் நடை​பெற்​றுள்​ள​தாக ஆவணத்​தில் குறிப்​பிட்​டிருந்​தால், வரு​மான வரித்​துறைக்கு தெரிவிக்க வேண்​டும் என்று மீண்​டும் அறி​வுறுத்​தப்​படு​கிறது.

அவ்​வாறு ரூ.20 ஆயிரத்​துக்​கும் மேல் ரொக்​கப் பரி​மாற்​றம் குறித்த தகவல் ஆவணத்​தில் இருந்​தால், அதுகுறித்து வரு​மானவரித் துறைக்கு ஆவணத்​தின் நகலுடன் பதிவு அதி​காரி தகவல் அளிக்க வேண்​டும். அதற்​கான அறிக்​கை, ஆவணத்​தின் நகலை பாதுகாக்க வேண்​டும்.

ஒரு​வேளை தகவல் தெரிவிக்​காதது அல்​லது காலம் தாழ்த்​தி​யது தெரிந்​தால், மாவட்ட பதி​வாளர்​கள் அதுகுறித்த அறிக்​கையை மண்டல துணை பதி​வாளர்​களுக்கு அனுப்​பி, சம்​பந்​தப்​பட்ட பதிவு அதி​காரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்​துரைக்க வேண்​டும்.

சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தணிக்கை பிரிவு பதி​வாளர் பதிவுக்கு வரும் ஆவணங்​களை ஆய்வு செய்ய வேண்​டும். பதிவு அலுவலர்கள் வழங்​கப்​பட்​டுள்ள உத்​தரவை கண்​டிப்​பாக பின்​பற்ற வேண்​டும். மாவட்ட பதி​வாளர்​கள், துணை பதிவுத்​துறை தலை​வர்​கள் உரிய அறி​வுறுத்​தல்​களை பதிவு அலு​வலர்​களுக்கு வழங்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.