போட்டித் தேர்வர்களின் திறன்களை மேம்படுத்த இரண்டு நாள் பயிற்சி

போட்டித் தேர்வர்களின் திறன்களை மேம்படுத்த இரண்டு நாள் பயிற்சி
நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

போட்டித் தேர்வர்களின் திறன்களை மேம்படுத்த இரண்டு நாள் பயிற்சி

நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளை நடத்துதல், தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைநாடுநர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்கும், நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும் தேவைப்படும் திறன்களை பெறுவதற்கு ஏதுவாக "Workshop on Pre Job Skills" என்ற தலைப்பில் உரிய அனுபவமிக்க நிபுணர்கள் / வல்லுநர்கள் (Experts) கொண்டு 09.08.2025 (சனி) மற்றும் 10.08.2025 (ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் (காலை 9.30 மு.ப முதல் 5.30 பி.ப வரை) பயிலரங்கமாக(Two Days Workshop) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.