தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்​னணி மாநில தலை​வர் தகவல்

தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்​னணி மாநில தலை​வர் தகவல்
தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்​னணி மாநில தலை​வர் தகவல்

திருப்​பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகளை வைக்​கத் திட்டமிட்டுள்​ள​தாக இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கூறி​னார். இது தொடர்​பாக திருப்​பூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி தமிழ்​நாட்​டில் ஒன்​றரை லட்​சம் இடங்களில் சிலைகள் வைக்க ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த ஆண்டு 15 லட்​சம் வீடு​களில் அரை அடி முதல் ஒரு அடி வரையி​லான விநாயகர் சிலைகள் வைக்​கப்​பட்​டன. இந்த ஆண்டு அதை​விட அதிக எண்​ணிக்​கை​யில் சிலைகள் வைக்கப்படும்.

சென்​னை​யில் மட்​டும் 5,500 இடங்​களில் விநாயகர் சிலைகள் வைக்​கப்பட உள்​ளன. திருப்​பூர் மாவட்​டம் முழு​வதும் 6 ஆயிரம் இடங்​களில் சிலைகள் வைக்க ஏற்​பாடு செய்து வரு​கிறோம். திருப்​பூரில் நடை​பெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்​வலத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நடிகை கஸ்​தூரி, கோவை​யில் பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, இயக்குநர்கள் பேரரசு, மோகன்​கு​மார், நடிகர் ரஞ்​சித் உள்​ளிட்​டோர் பங்​கேற்க உள்​ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்​கு​மாறு தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு அழைப்பு விடுப்​போம். அவர் நேரம் கொடுத்தால், அவரை சந்​தித்து அழைப்​பிதழ் வழங்​கத் தயா​ராக இருக்​கிறோம். ரம்​ஜான், பக்​ரீத், கிறிஸ்​து​மஸ் போன்ற பண்டிகைகளில் அவர் பங்​கேற்​ப​தை​போல, விநாயகர் சதுர்த்தி விழா​விலும் பங்​கேற்க வேண்​டும் என்று அவருக்கு அனுப்​பும் கடிதத்​தில் வலி​யுறுத்​து​வோம். ரம்​ஜானுக்கு அரிசி வழங்​கு​வதைப்​போல, வீடு​களுக்கு இலவச​மாக அரை அடி விநாயகர் சிலையை தமிழக அரசு இலவச​மாக வழங்க வேண்​டும் என்​றும் முதல்​வரிடம் கோரிக்கை வைப்​போம்.

காகிதக்​கூழில் விநாயகர் சிலைகள் செய்​யப்​படு​வ​தால், சுற்​றுச்​சூழலுக்கு எவ்​விதப் பாதிப்​பும் இல்​லை. ஒவ்​வோர் ஆண்​டும் விநாயகர் சிலை ஊர்​வலத்​துக்கு மற்​றும் விழாவுக்கு காவல் துறை மூலம் அரசு இடையூறு செய்து வரு​கிறது. அதை​யும் மீறி மக்கள் ஒத்​துழைப்​படன் வி​நாயகர் சதுர்த்தி விழாவை விமரிசை​யாக நடத்தி வரு​கிறோம்​. இவ்​வாறு காடேஸ்​வ​ரா சுப்​பிரமணியம்​ கூறினார்.