நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு கல்வி மற்றும் வர்த்தகத்தின் புதிய உத்திகள் குறித்த முக்கிய அமர்வுகள்

பயோனியர் குமாரசாமி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு - உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான புத்தாக்கங்கள் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உத்திகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கு கனடாவின் ஜிரோடால் – மொழி, ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் மற்றும் இந்தோனேஷியாவின் யூனிவெர்சிடஸ் நெகேறி மகாசர் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடைபெற்றது.
கருத்தரங்கின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெயசேகரன் தலைமை தாங்கினார், முனைவர். ஜி. ரெக்சின், துணை முதல்வர் கருத்தரங்கைத் துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்க ஆய்வு கட்டுரைகள் புத்தகம் தொகுப்பாசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, கல்லூரி முதல்வர், வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து வெளியிட்டனர்.
வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் சித்திக் அவர்கள் ஒருங்கிணைப்பில் வெளிநாட்டை சார்ந்த சிறப்புரைஞர்கள் டாக்டர் மெஹ்தி மனுசெர்சதே (கனடா), பேராசிரியர் ரானியா லாம்பூ (கிரேஸ்), டாக்டர் ஹாமெத் பார்ஜெஸ்தே (ஈரான்), டாக்டர் முத்மைந்நா (இந்தோனேஷியா), டாக்டர் ஆண்டி அஸ்ரிஃபான் (இந்தோனேஷியா) ஆகியோர் இணையதள வழியாகப் பேசினார்கள். மற்றும் பேராசிரியை முனைவர் அனிதா ஒருங்கிணைப்பில் திருச்சூர் கிறிஸ்து பல்கலைக்கழகம் பேராசிரியர் முனைவர் வர்கீஸ் மற்றும் தமிழா அகாடமி தலைவர் முனைவர் தமிழா கார்த்திக் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வியில் தொழில் நுட்பத்த்தின் பங்கு எனும் தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்தனர். அதை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
கருத்தரங்கின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. இந்த மாநாடு கல்வி மற்றும் வர்த்தக துறையில் தொழில்நுட்ப மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சிகளை உள்ளடக்கிய புத்தாக்கங்களைத் தூண்டும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது, மற்றும் உலகளாவிய பொருளாதார சூழலில், வர்த்தகத்தையும் கல்வியையும் பரவலாக மாற்றி அமைப்பதற்கான முக்கியமான சந்திப்பாக இந்த கருத்தரங்கு செயல்படும் எனவும் வணிகவியல் துறை தலைவர் முனைவர் அருள் ஸ்டீபன் தெரிவித்தார்.