இரண்டாவது நாளாக எகிறிய தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் 23-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75 ஆயிரத்து 40க்கு விற்பனையானது. அதன் பின்னர் தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது.

இந்த சூழலில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கி உள்ளது. கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்ந்து கொண்டே வந்து, நேற்று முன்தினம் ரூ.75 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை நேற்றும் உயர்ந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-ஐ தொட்டதுதான் புதிய உச்சமாக அப்போது இருந்தது. இதே நிலையை நேற்று முன்தினமும் தொட்டது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தை தங்கம் எட்டி இருந்தது.


Yasmin fathima

