தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: ​பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக தேர்​தல் ஆணை​யத்​தைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது.

இதுதொடர்​பாக கட்​சி​யின் தமிழக தலை​வர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்​தல் ஆணை​யத்​துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடு​களை நிகழ்த்தி வெற்றி பெற்று வரு​வதை ராகுல்​காந்தி ஆதா​ரங்​களு​டன் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாட​கா​வில் ஒரே தொகு​தி​யில் 1 லட்​சம் போலி வாக்​காளர்​கள் சேர்ப்​பை ஆதா​ரத்​துடன் வெளி​யிட்​டார். அதே​போல, மகாராஷ்டிராவில் நடந்த மக்​களவை மற்​றும் சட்​டப்​பேரவை தேர்​தல்​களில் 1 கோடி போலி வாக்​காளர்​கள் தங்​கள் வாக்​கு​களை பதிவு செய்​திருப்​ப​தாக புள்ளி விவரத்​தை​யும் வெளி​யிட்​டார்.

தேர்​தல்​களில் தொடர்ந்து பாஜக வெற்றி பெறு​வ​தில் மிகப்​பெரிய மோசடியை செய்​வதற்கு தேர்​தல் ஆணை​யம் உடந்​தை​யாக இருக்​கிறது. தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ராக தலை​வர் ராகுல்​காந்தி கூறிய குற்​றச்​சாட்​டு​களுக்கு தீர்வு கிடைக்​கும் வரை ஜனநாயகத்தை காக்​கும் போராட்​டத்​தில் இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தொடர்ந்து குரல் கொடுக்​கும்.

தேர்​தல் ஆணைய முறை​கேடு​களை​யும், பாஜக​வுக்கு உடந்​தை​யாக இருப்​ப​தை​யும் கண்​டித்து தமிழ்​நாடு முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் காங்​கிரஸ் கட்சி சார்​பில் வரும் ஆக.11-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். சென்​னை​யில் சைதாப்​பேட்டை பனகல் மாளிகை அரு​கில் எனது தலை​மை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.