ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து: சென்னையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து: சென்னையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டு கைது

சென்னை: டெல்​லி​யில் தேர்​தல் ஆணை​யம் நோக்கி பேரணி​யாகச் சென்ற ராகுல்​காந்தி உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்ததைக் கண்​டித்​து, சென்னை சத்​தி​யமூர்த்தி பவன் முன்பு மறியலில் ஈடு​பட்ட செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்ட காங்​கிரஸ் நிர்வாகி​கள் நேற்று கைது செய்​யப்​பட்​டனர்.

வாக்​காளர் பட்​டியலில் நடை​பெற்​றுள்ள முறை​கேடு தொடர்​பாக டெல்​லி​யில் போராட்​டம் நடத்​திய அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்ட தலை​வர்​களை​யும், இண்​டியா கூட்டணி தலை​வர்​களை​யும் டெல்லி காவல் துறை நேற்று கைது செய்​தது. இதைக் கண்​டித்​து, தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் சென்னை சத்​தி​யமூர்த்தி பவன் முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடு​பட்​டனர். இந்​நிலை​யில் செல்​வப்​பெருந்​தகை உட்பட 100-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் நிர்​வாகி​களைக் கைது செய்த போலீ​ஸார், நேற்று மாலை விடு​வித்​தனர்.

இந்த மறியல் போராட்​டம் குறித்து செல்​வப்​பெருந்​தகை கூறிய​தாவது: இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் மற்​றும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் தேர்​தல் ஆணை​யரைச் சந்​திக்க நேரம் கேட்​டிருந்​தனர். அதனால் மக்​களவை வளாகத்​திலிருந்​து, தேர்​தல் ஆணை​யர் அலு​வல​கம் நோக்கி பேரணி​யாகச் சென்​றனர். அவர்​களை தடுத்து நிறுத்​தி, மத்​திய பாஜக அரசும், டெல்லி போலீ​ஸாரும் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தைச் சேர்ந்த 40 எம்​பிக்​களும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டோம். தேர்​தல் ஆணை​யத்​தில் நடந்​துள்ள முறை​கேடு, சதித்​திட்​டம், தேர்​தல் ஆணை​ய​மும் பாஜக​வும் எப்​படி மோசடி செய்​துள்ளன என்​பதை புள்ளி விவரங்​களு​டன் ராகுல் காந்தி வெளி​யிட்​டுள்​ளார். இதற்கு பதிலளிக்க திறன் இல்​லாமல் கைது செய்​திருப்​பது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது

இந்​தி​யக் குடிமக்​கள் அவர்​களின் வாக்கை யாருக்கு செலுத்​து​வது என்று அவர்​கள்​தான் தீர்​மானிக்க வேண்​டும். அரசி​யல் அமைப்பு சட்​டம் இதைத்​தான் சொல்​கிறது. ஆனால் ஒரு​வருடைய வாக்​கைத் திருடு​வது எந்த வகை​யில் நியா​யம். இதற்கு பதில் சொல்ல முடி​யாமல் எல்லா மாநிலங்​களி​லும் உள்ள தகவல்​கள் அழிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். இதிலிருந்து அவர்​கள் தப்​புவது கடினம். இதற்கு அவர்​கள் பதில் சொல்​லியே ஆக வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் முன்​னாள் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் கே.வீ.தங்​க​பாலு, பொதுச்​செய​லா​ளர்​கள் டி.செல்​வம், பி.​வி.தமிழ்ச்​செல்​வன், துரை சந்​திரசேகர் எம்​எல்ஏ, மாவட்​டத் தலை​வர்​கள் ஜெ.டில்​லி​பாபு, முத்​தழகன், இலக்​கிய அணித் தலை​வர் புத்​தன், அமைப்​புச் செய​லா​ளர் ராம் மோகன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று கைதாகினர்​.