கோவையில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் விருது மற்றும் உழைப்பாளர் தின விழா

கோவையில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் விருது மற்றும் உழைப்பாளர் தின விழா
பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த உழைப்பாளர் தின விழா

              கோவை செளரிபாளையம் பகுதி உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மே-1 உழைப்பாளர் தின விழா கொண்டாட்டம் செளரிபாளையம் மகாகவி பாரதி அம்மன் அடிமை அரசு பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது.

பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செளரிபாளையம்-உடையாம்பாளையம் பகுதியில் கடந்த 50 -ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துக்கொண்டும் ,உலகிற்கு அடையாளம் தெரியாமல், தன் உழைப்பின் மூலம் பல்வேறு சமுதாய பணிகளை செய்து கொண்டு வரும் 20 -க்கும் மேற்பட்ட உழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி உழைப்பாளர் விருதுகள்-2025 வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

விருதாளர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய உழைப்பாளர் தின பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கத்தோலிக்க தேவாங்கர் நலச்சங்க செயலாளரும்-பாலம் அமைப்பின் நிறுவனருமான திரு.பாலம் பாபு, Lion club of the Grand திரு.சகாயராஜ் ,சமூக சேவகர் திரு.அரோமா நந்தகோபால் , சமூக சேவகர்கள் திரு.சிவக்குமார், பாலசுப்பிரமணியம் . அரசு நல்நூலகர் திரு.இலட்சுமணசாமி ,நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் திரு.காளிமுத்து, ராஜ்குமார், அந்தோணி , சமூக சேவகர் திரு.சன் எலக்ட்ரிக்கல் பிரபாகரன் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

உழைப்பாளர் விருது பெற்றவர்கள்

திரு.சுந்தரம் 

பழ வியாபாரி -செளரிபாளையம்

திரு.ராஜா 

கெளரி பேக்கரி ஊழியர்-செளரி பாளையம் 

திரு.பழனிச்சாமி

மயான ஊழியர் -செளரிபாளையம்-உடையாம்பாளையம்

திரு.கோபால் 

தேங்காய் வியாபாரி-செளரி பாளையம் 

திரு.கோவிந்தன்

சண்முகப்பிரியாமருத்துவமனை தலைமை ஊழியர்-செளரி பாளையம் 

திருமதி.முத்தம்மாள்

அயனிங் ஊழியர்-செளரிபாளையம்

திரு.சசிகுமார்

 பேக்கரி ஊழியர்-செளரி பாளையம் 

திரு.அன்பு

மாநகராட்சி கழிப்பிட பணியாளர்-செளரிபாளையம்

 திரு.மணிகண்டன் 

மயான ஊழியர் -உடையாம்பாளையம்

திருமிகு.சண்முகன் விஜயகுமார்

அஞ்சனா பேக்கரி -உடையாம்பாளையம்

செல்வி.தர்ஷினி

அஞ்சல் ஊழியர்-செளரி பாளையம் 

திரு.மனோகரன் 

ஹரன் சலூன்கடை -உடையாம்பாளையம்

திரு.தமிழ்வாணன்

ஆறுமுகம் சைக்கிள் கடை-உடையாம்பாளைம்

திரு.அந்தோணி

நூலக வாசகர் -செளரிபாளையம்

 பேருந்து ஓட்டுநர்-நடத்துநர்

95-பேருந்து வழித்தடம்