கோவையில் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் விருது மற்றும் உழைப்பாளர் தின விழா

கோவை செளரிபாளையம் பகுதி உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மே-1 உழைப்பாளர் தின விழா கொண்டாட்டம் செளரிபாளையம் மகாகவி பாரதி அம்மன் அடிமை அரசு பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது.
பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செளரிபாளையம்-உடையாம்பாளையம் பகுதியில் கடந்த 50 -ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துக்கொண்டும் ,உலகிற்கு அடையாளம் தெரியாமல், தன் உழைப்பின் மூலம் பல்வேறு சமுதாய பணிகளை செய்து கொண்டு வரும் 20 -க்கும் மேற்பட்ட உழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி உழைப்பாளர் விருதுகள்-2025 வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
விருதாளர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய உழைப்பாளர் தின பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கத்தோலிக்க தேவாங்கர் நலச்சங்க செயலாளரும்-பாலம் அமைப்பின் நிறுவனருமான திரு.பாலம் பாபு, Lion club of the Grand திரு.சகாயராஜ் ,சமூக சேவகர் திரு.அரோமா நந்தகோபால் , சமூக சேவகர்கள் திரு.சிவக்குமார், பாலசுப்பிரமணியம் . அரசு நல்நூலகர் திரு.இலட்சுமணசாமி ,நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் திரு.காளிமுத்து, ராஜ்குமார், அந்தோணி , சமூக சேவகர் திரு.சன் எலக்ட்ரிக்கல் பிரபாகரன் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உழைப்பாளர் விருது பெற்றவர்கள்
திரு.சுந்தரம்
பழ வியாபாரி -செளரிபாளையம்
திரு.ராஜா
கெளரி பேக்கரி ஊழியர்-செளரி பாளையம்
திரு.பழனிச்சாமி
மயான ஊழியர் -செளரிபாளையம்-உடையாம்பாளையம்
திரு.கோபால்
தேங்காய் வியாபாரி-செளரி பாளையம்
திரு.கோவிந்தன்
சண்முகப்பிரியாமருத்துவமனை தலைமை ஊழியர்-செளரி பாளையம்
திருமதி.முத்தம்மாள்
அயனிங் ஊழியர்-செளரிபாளையம்
திரு.சசிகுமார்
பேக்கரி ஊழியர்-செளரி பாளையம்
திரு.அன்பு
மாநகராட்சி கழிப்பிட பணியாளர்-செளரிபாளையம்
திரு.மணிகண்டன்
மயான ஊழியர் -உடையாம்பாளையம்
திருமிகு.சண்முகன் விஜயகுமார்
அஞ்சனா பேக்கரி -உடையாம்பாளையம்
செல்வி.தர்ஷினி
அஞ்சல் ஊழியர்-செளரி பாளையம்
திரு.மனோகரன்
ஹரன் சலூன்கடை -உடையாம்பாளையம்
திரு.தமிழ்வாணன்
ஆறுமுகம் சைக்கிள் கடை-உடையாம்பாளைம்
திரு.அந்தோணி
நூலக வாசகர் -செளரிபாளையம்
பேருந்து ஓட்டுநர்-நடத்துநர்
95-பேருந்து வழித்தடம்